முசிறி அருகே தொடர் திருட்டு…- போலீசுக்கு போக்கு காட்டிய இருவர் கைது 12 சவரன் தங்க நகைகள் 2 பைக்குகள் பறிமுதல்..!
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஜம்புநாதபுரத்தில் கடந்த 4 மாதங்களாக கோவில்கள் மற்றும் வீடுகளைக் குறித்து மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களைப் பிடிக்க திருச்சி மாவட்ட போலீஸ் எஸ் .பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். அதன்படி முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் துறையூர் கள்ளிக்குடி அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸருக்கு ரகசிய தகவல் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பொன்பரப்பியை சேர்ந்த தமிழ் பாரதி மற்றும் திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த சரவணன் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில்இருவரும் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.இவர்களில் தமிழ் பாரதி என்பவர் மீது 40ற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து குற்றவாளிகளிடமிருந்து 12 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Comments are closed.