திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சண்முகம் என்கிற ஒத்தக்கை சண்முகம் (வயது 46). பெயிண்டர். குடிப்பழக்கம் உள்ள இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் ஒத்தக்கை சண்முகம் சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுடுகாட்டில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.