இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100), கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். வயது மூப்பின் காரணமாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நல்லகண்ணு கடந்த 11-ந்தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில், நல்லகண்ணு இன்று (அக்.16) மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments are closed.