திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி- ஆலோசனை குழு கூட்டத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு…!
திருச்சி விமான நிலைய வளர்ச்சி குறித்த ஆலோசனை குழு கூட்டம் நடந்தது .கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பேசுகையில், திருச்சி, சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. விமான நிலையத்தில் போலீஸ் உள்ள பூத்களில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். எனவே, சிஐஎஸ்எப் வீரர்களுடன் ஒருங்கிணைந்து, உள்ளூர் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். வாகனங்களுக்கான நுழைவு கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். தற்போது, பெய்த மழையில், விமான நிலைய வளாகத்தில் போதிய வடிகால் இல்லாததால், கொட்டப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது. எனவே, குடியிருப்புகள் பாதிக்கப்படாத வகையில்,
விமான நிலையத்தில் வடிகால் அமைக்க வேண்டும். பயணிகளிடம் அத்துமீறும் சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் இருந்து, டில்லி, கொச்சி நகரங்களுக்கு விமான சேவை அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Comments are closed.