அடுத்த 5 ஆண்டுகளில் துறைவாரியான வளர்ச்சி இலக்குகள்…* முதலமைச்சர் வெளியிட்ட ‘ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்’…!
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. ஆட்சியை தக்கவைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் துறை வாரியாக நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட் என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் மீண்டும் திமுகவை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த ஸ்டேட்மெண்டில் முதல்வர் தெரிவித்து இருப்பதாவது;-
* ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம்.
*தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.
*கால்நடை – பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பால் உற்பத்தி உயர்வு, மீனவர்கள் வாழ்வு மேம்பாடு.
*நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்.
*சிறு குறு நடுத்தரத் தொழில் துறை சார்பில், 5 சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்.
*நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பான நவீன சாலை தொழில்நுட்பம்.
*கைத்தறி மற்றும் ஜவுளித்துறை சார்பில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பான திட்டங்கள்.
* வீட்டு வசதித்துறையின் சார்பில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் சேர்த்து 7 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
*மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு.
*வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்.
*பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், லைப்ரரி 5.0, வெற்றிப்பள்ளிகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்.
*உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் 2.0 திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்.
*பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பொருளாதார முன்னேற்றம்.
*ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.