சமயபுரம் மாரியம்மன் சித்திரை திருவிழா வரும் ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது .18ஆம் தேதி தேரோட்டமும் 19ஆம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு ஏப்.18,19ம்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தி குறிப்பு அறிவித்துள்ளார். மேலும் அவர் தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் அவர் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
