Rock Fort Times
Online News

சிங்கப்பூரிலிருந்து காலணியில் மறைத்து கடத்தி வந்த ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்…

திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானம் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சிங்கப்பூரிலிருந்து விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர், தான் அணிந்திருந்த காலணியில் 798 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கத்தை அவரிடம் கொடுத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள்? என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்