சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் தனது பேண்டில் ரூ.20 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 349 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முத்துராசு என்பவர தனது பேண்டில் மறைத்து ரூ.20 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான 348 கிராம் தங்கத்தை கடத்தி வந்தார். அந்த தங்கத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.