Rock Fort Times
Online News

தபால் வழியாக ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் – ரிசா்வ் வங்கி புதிய அறிவிப்பு…

2,000 ரூபாய் நோட்டுகளை தபால் மூலம் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நோட்டுகளை மாற்றவும், வங்கிக் கணக்கில் டெபிட் செய்யவும் அக்டோபர் 7ஆம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி 19 கிளை அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட கால வரம்பு இல்லாமல் நோட்டுகளை மாற்றவோ அல்லது தங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கவோ அனுமதித்துள்ளது. இதற்கு எவ்வித கால அவகாசம் தற்போது வரை விதிக்கப்படவில்லை. இந்நிலையில் ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் ரூபாய் 2000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தபால் வழியாக ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி தொகையை தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்