Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது…!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி ரூ. 6.84 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, வங்கதேசம் மற்றும் இந்திய நோட்டுகளையும், மற்றொரு பயணி  ரூ. 9.91 லட்சம் மதிப்பிலான 12,000 அமெரிக்க டாலர்களையும் உரிய அனுமதியின்றி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்