திருச்சியை அடுத்த கல்லணை அருகே கிளிக்கூடு கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.15 லட்சத்துடன் நேற்று இரவு 7 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். உத்தமர்சீலி மேலவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் மணிகண்டன் மீது மிளகாய் பொடியை தூவி அவரிடமிருந்த ரூ.15 லட்சம் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.