Rock Fort Times
Online News

திருச்சியில் போலி ஆவணம் மூலம் ரூ.15 லட்சம் நில மோசடி- ஒருவர் கைது , 5 பேருக்கு வலை…

திருச்சி அமராவதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 67). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், பெரியசாமி என்பவரிடம் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதை அடுத்து அவர் திருச்சி கே. சாத்தனூர் கவி பாரதி நகரில் உள்ள பர்மா அகதிக்கு சொந்தமான ஒரு இடத்தை காண்பித்துள்ளார். 1200 சதுரடி கொண்ட அந்த நிலம் சுமார் ரூ. 15 லட்சம் ஆகும். இந்த நிலத்தை சங்கர் என்பவருக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளதாக கூறி பாபுராஜிடம் ரூ.15 லட்சம் வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை அவரது பெயருக்கு போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
பின்னர், விசாரித்த போது அந்த நிலம் பர்மா அகதியான காளி என்பவரது பெயரில் இருப்பதும், யாருக்கும் பவர் பத்திரம் செய்து கொடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபுராஜ், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து கே.சாத்தனூர் கவி பாரதி நகரை சேர்ந்த சங்கர் (56) என்பவரை கைது செய்தார். மேலும், இது தொடர்பாக மதியழகன், புவனேஸ்வரி, பெரியசாமி, தியாகராஜன் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்