Rock Fort Times
Online News

நிலம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி: ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது…!

திருச்சி மன்னார்புரம் புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 59). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து நாதன்(45) என்பவர் அறிமுகமானார்.  இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.  இந்தநிலையில் செல்வம், மண்ணச்சநல்லூர்  அருகே நிலம் வாங்குவதற்காக நந்தனிடம் ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை செல்வம் பெயருக்கு பதிவு செய்யாமல் நாதன் ஏமாற்றியதாக தெரிகிறது. இது குறித்து செல்வம் மற்றும் அவரது மகன் இருவரும்  கே.கே.நகர் அரிசி குடோன் அருகே சென்று நாதனிடம் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த நாதன் அவர்களை தகாத வார்த்தையால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இது குறித்து கே.கே. நகர் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனை கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்