திருச்சி அரியமங்கலம் மலையப்பன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பாலமுருகன் (வயது 36 ). இவர் ராணுவத்தில் பணியாற்றியவர். இவரிடம், ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் தெற்கு தெருவை சேர்ந்த கோபால் மகன் பிரபு என்பவர், தான் கார் கன்சல்டன்சி வைக்கப் போவதாகவும், இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளாா் . இதை நம்பிய பாலமுருகன் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை பிரபுவிடம் கொடுத்தார். அதில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்தை பாலமுருகனிடம் திரும்ப கொடுத்துவிட்டார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் பாலமுருகன் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து பிரபுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.