திருச்சி பெரிய மிளகு பாறை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகனுக்கு திருச்சி பொன் நகரைச் சேர்ந்த ரவுடி செல்வம் என்கிற வல்லரசு (வயது 35)என்பவர் போதை மாத்திரை விநியோகம் செய்தார். இதை அறிந்து அந்த வாலிபரின் தாயார் ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ரவுடி வல்லரசை கைது செய்தனர் பின்னர் அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகளையும் ரூ.6 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
Comments are closed.