நாமக்கல், பீமநாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சூர்யா (வயது 24). இவர் ஓயாமரி ரோட்டில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் இவர் மீது ஆட்டோவை வைத்து மோதினர். பின்னர், சூர்யாவிடம் கத்தி முனையில் இரண்டு செல்போன்கள் மற்றும் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரகுபதி என்கிற பிரபாகரன், சந்தோஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள், பணம் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய மாரிமுத்து என்கிற ஆட்டோ மாரியை தேடி வருகின்றனர்.

Comments are closed.