செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த சிறுமிகள் உள்பட 6 பேர் மீட்பு…
திருச்சி மாவட்டம், லால்குடி திருமண மேடு ராஜ கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32).இவர் அந்தப் பகுதியில் செங்கல் சூளை வைத்து நட த்தி வருகிறார். இங்கு தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்துவதாகவும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ளதாகவும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் லால்குடி உதவி கலெக்டருக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் அந்த செங்கல் சூளையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை கொத்தடிமையாக நடத்தி வந்ததும், குழந்தை தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் வருவாய்த் துறையினர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைமுடி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அய்யனார் (வயது 24), அவரது மனைவி மாரியம்மாள் (21) மற்றும் 3 சிறுமிகள், 1 சிறுவன் ஆகிய 6 பேரையும் மீட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செங்கல்சூளை அதிபர் மீது லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.