பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் எஸ்ஆர்எம் யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சுமார் 4000 பேர் இன்று (16-02-2024) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அவர்கள் பேரணியாக வந்து ரயில்வே பணிமனை வாசலில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.