Rock Fort Times
Online News

திருச்சியில் குடிநீர் வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவிரி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். சப்பாணி கோவில் தெரு மயானத்திற்கு அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், தெருவில் உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தலைமையில் அந்தப் பகுதி பொதுமக்கள் இன்று(12-05-2025) திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர்கள் பாரதிதாசன், சீனிவாசன், பரிமணம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.லெனின், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அஜித்குமார், நடராஜன், முருகன், கருணாநிதி, செல்வமணி, ரவிச்சந்திரன் உள்பட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்