தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, அனைத்து தொகுப்பு புதிய ஊழியர்கள் சங்கத்தினரை கல்வித்துறையோடு இணைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். இந்த வருடம் வழங்கப்படாத ஊதிய உயர்வை குறைந்தபட்சம் 35 ஆயிரம் என ஊதியம் மறு நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும். விருப்ப பணி மாறுதல் நடத்திட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும். பணியாளர்கள் நலன் கருதி இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு போன்றவைகள் நிறைவேற்றிட வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ( 30.10.2023 ) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் பிரிட்டோ தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் விஜயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். மேலும் இதில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.