மீன்வளத்துறையின் சார்பில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டம்…
அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா்...
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், சித்தாம்பூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இன்று (10.01.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு கலந்துகொண்டு சித்தாம்பூர் ஊராட்சி அய்யாற்றின் குறுக்கே சித்தாம்பூர் கொடுந்துரை சாலையில் ரூபாய் 8.52 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதேபோல , திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பீட்டில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தினை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி , மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், மாவட்ட ஊராட்சித்தலைவர் த.ராஜேந்திரன், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் க.வைரமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (திருச்சி மண்டலம்) ஆர்.சர்மிளா, உதவி இயக்குநர் ப.ரம்யாலட்சுமி, ஒன்றியக் குழுத்தலைவர் துரைராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.