பேராசிரியர் அன்பழகனின் 5ம் ஆண்டு நினைவு நாள்..!- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை !
திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி காலமானார். அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி,திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரின் புகைப்படத்திற்கு, திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என் நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் கே.வைரமணி, மாநகர செயலாளரும் மேயருமான மு.அன்பழகன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமல் முஸ்தபா, இளங்கோ மாவட்ட பொருளாளர் துரைராஜ், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வார்டு, பகுதி, ஒன்றிய, மாநகர,மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT…👇
Comments are closed.