முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…
அமைச்சர்கள் வழங்கினர்..
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் தலைமையில் இன்று ( 17.06.2023 ) நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினர். மொத்தம் ரூ.41 லட்சத்து 18 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், செளவுந்தர பாண்டியன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயஸ் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.