Rock Fort Times
Online News

சிறை கைதிக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் உயிரிழந்தார்…

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் ரங்கராஜன் (45). திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் கடந்த 5 மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்தார். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட, பெற்றோர்களும் கைவிட்ட நிலையில் ஜாமீன் எடுக்கக்கூட ஆளின்றி சிறையில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கராஜனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாககூறப்படுகிறது. உடனே, அவருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்