Rock Fort Times
Online News

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!

ஆடிப்பெருக்கு நாளை ( 03.08.2023 ) கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மாா்க்கெட் பூ சந்தையிலும், ஸ்ரீரங்கம் பூ சந்தையிலும் கடந்த வாரத்தை விட பூக்களின் விலை உயா்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ 500 ரூபாய்க்கும், முல்லை, ஜாதி மற்றும் கனகாம்பரம் கிலோ ரூ.400க்கும், விருச்சிபூ 160க்கும், சம்மங்கி 240க்கும், அரளி பூ 260க்கும், ஜெவந்தி 240க்கும், பன்னீா் ரோஸ் 180க்கும் விற்பனையாகிறது. நாளை, பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்