தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது…* ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்!
ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்த ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளான செப்., 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தநாளில், கல்வியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி, மத்திய அரசு கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, தமிழகத்தில் இருவர், புதுச்சேரியில் ஒருவர் உட்பட 45 ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்தநிலையில், டில்லியில் இன்று நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அந்தவகையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள, பாரதியார் நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.
Comments are closed.