Rock Fort Times
Online News

பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் முன்னெச்சாிக்கை தடுப்பு நடவடிக்கை…..

திருச்சி மேயர் மு. அன்பழகன் தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மண்டலம் 1, 3 , 4 மற்றும் 5வது மண்டலம் ஆகிய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன், மண்டல குழு தலைவர்கள் மு. மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் அந்தந்த மண்டலத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 3 மின்மோட்டார்கள் , 5 ஆயில் இன்ஜினீகள், 10 எச்பி மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரம், புதைவடிகால் மண் அடைப்பு எடுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ப்ளீச்சிங் பவுடர் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை மேயர் பார்வையிட்டாா். மேலும் மழை காலத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது . மாநகராட்சி பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் டோபி காலனி, ராஜீவ் காந்தி நகர், ஆதிநகர், பாத்திமா நகர், ஏயூடி நகர் ,கிருஷ்ணாபுரம் ,துளசிங்க நகர் ஆகிய இடங்களில் தண்ணீர் உடனடியாக அகற்ற 2 எச்பி டீசல் மோட்டார் கொண்ட நீர் ஊற்று நிலையம் அமைக்கப்பட்டு, 2 மின்மாட்டார்களும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் மழைநீர் எங்கும் தேங்காத அளவுக்கு மாநகராட்சி முழுவதும் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்