Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் நாளை( மே 29) மின்தடை…!

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் மே 29 வியாழக்கிழமை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில், துறையூர் மின் கோட்டத்துக்குள்பட்ட தங்கநகர், பாலகிருஷ்ணம்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (மே 29) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக எரகுடி, திருமானூர், பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், ரெட்டியார்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரபெருமாள்பட்டி, கல்லாங்குத்து, எஸ்.என்.புதூர், எ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டபாளையம், கிழப்பட்டி, வடக்குபட்டி, கோட்ட பாளையம், பி.மேட்டூர், கே.புதூர், மாராடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்