பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாவட்டம் லால்குடியில் ஜூன் 13-ம் தேதி மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், எல்.அபிஷேகபுரம் துணை மின்நிலைய உயரழுத்த மின்பாதையில் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்றைய தினம் ஏ.கே.நகர், லால்குடி வடக்கு வீதி, தெற்கு வீதி, மேலவீதி, கீழ வீதி, நன்னிமங்கலம், மும்முடிசோழ மங்கலம், வரதராஜ நகர், பச்சன்னபுரம், அய்யனார் கோயில் பிரதான சாலை, பரமசிவபுரம் முதல் குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் 13- ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.