Rock Fort Times
Online News

துவாக்குடி, லால்குடி பகுதிகளில் 22-ம் தேதி மின் நிறுத்தம்…!

திருச்சி மாவட்டம், துவாக்குடி துணை மின்நிலையத்தில் 22-11-2024 ( வெள்ளிக்கிழமை) பராமரிப்புப் பணிகள்  மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக் பகுதி ,எம்.டி. சாலை, ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திரா நகர், பெல் நகரியம், ஏ, பி, சி. இ. ஆர், பிஎச் பிரிவுகள், என்.ஐ.டி, துவாக்குடி, தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராய நேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில்  22ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல  திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் துணைமின் நிலையத்தில் 22.11.2024 வெள்ளி அன்று மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் லால்குடி நகர், அரசு பொது மருத்துவமனை, நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், நன்னிமங்கலம், பூவாளுர், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி. மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் காத்தலும், லால்குடி செயற்பொறியாளர் கே.அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்