ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், அதனை பொருத்துவதற்காக தற்போது மின் இணைப்பில் உள்ள தரமான எலக்ட்ரானிக் மீட்டர்களை அகற்றக்கூடாது, ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி அதன் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க மாநில அரசை நிர்பந்திக்க கூடாது, வேலை பளு ஒப்பந்த பதிவுகளை ரத்து செய்வதற்கு முன் 9 ஏ நோட்டீஸ் வழங்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மாநகர் சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், வட்ட செயலாளர் செல்வராஜ், லால்குடி கோட்ட செயலாளர் சார்லஸ், நகர கோட்ட செயலாளர் ராதா, வட்ட துணைத்தலைவர் ஜான்போஸ்கோ ரவி ஆகியோர் பேசினர். இதில், மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.