பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்தது. தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக இரண்டாம் பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (21.11.2023) காலை நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.