Rock Fort Times
Online News

பிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கு: மலையாள நடிகர் திலீப் விடுதலை!

கடந்த 2017ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் பிரபல நடிகையை மர்ம நபர்கள் காரில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், இதில் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அறிந்தனர்.
இதையடுத்து, இவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று( டிச.8) எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் சிறப்பு அமர்வு நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் காலை 11 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். பல்சர் சுனி என்ற சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ் விபி, சலீம் என்கிற வாடிவல் சலிம், பிரதீப் ஆகிய 6 பேரை குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வரிசையில் 8-வது இடத்தில் இருந்த நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்