தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில்
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான டோக்கன் விநியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 07.01.2024 ) தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, சர்க்கரை மற்றும் பொருளில்லா குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, அரிசி மற்றும் பொருளில்லா குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(9-1-2024) உத்தரவிட்டுள்ளார். டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் ஜன.14-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொங்கல் திருநாளுக்குள் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.