Rock Fort Times
Online News

திருச்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1,000 ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று ( 10.01.2024 ) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 1000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி , மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர், செயலாட்சியர் தா.அரசு மற்றும் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் அ.அபிபுல்லா, மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் .க.வைரமணி மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனா்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்