சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை- * திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர்கள் புகார்…!
திருச்சி வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரான வழக்கறிஞர் என்.தியாகராஜன் சம்பவத்தன்று நடை பயிற்சி சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன், செயலாளர் சி.முத்துமாரி ஆகியோர் தலைமையில் ஜாக் செயலாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் வடிவேல்சாமி, இணைச் செயலாளர் விக்னேஷ் , பொருளாளர் சதீஷ், மூத்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் எஸ்.ஆர். கிஷோர்குமார் மற்றும் வக்கீல்கள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை இன்று (ஜூன் 27) நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர், உரிய நடவடிக்கை எடுப்பதாக வழக்கறிஞர்களிடம் உறுதியளித்தார்.
Comments are closed.