Rock Fort Times
Online News

திருச்சி அருகே கபடி போட்டி நடத்தியதில் தகராறு ரவுடி வெட்டி கொலை 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு..!

திருச்சி அருகேயுள்ள கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் மீது திருச்சியின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.ரவுடி அசோக்கால் கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரகாஷ் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது நினைவாக கிளிக்கூடு கிராமத்தில் கபடி போட்டி ஒன்றை உள்ளூர் கிராமத்தினர் நடத்தியுள்ளனர். இதையறிந்த ரவுடி அசோக், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கும்லாக வந்து கபடி போட்டியா நடத்துகிறீர்கள்? என கேட்டு உள்ளூர் மக்களை மிரட்டியதோடு, அதே பகுதியை சேர்ந்த சின்ன அப்பு என்கிற பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் கபடி போட்டியை முன் நின்று நடத்திய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரவீனுக்கு தெரியவந்துள்ளது. இதனால், கோபமடைந்த ரவுடி அசோக், பிரவீன் வீட்டிற்கு ஆயுதங்களுடன் சென்று தகாத வார்த்தையில் பேசி வம்பு இழுத்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த எதிர்தரப்பினர் ரவுடி அசோக்கை வெட்டி சாய்த்துள்ளனர். வெட்டுக்காயங்களால் துடிதுடித்த ரவுடி அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசோக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வேலாயுதம் என்கிற பிரபு, சின்னத்தம்பி, மோகன், சின்ன அப்பு என்கிற பிரகாஷ், பாலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்