திருச்சி, பாலக்கரை பகுதியில் ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ரகசியமாக கண்காணித்தனர்.அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் (வயது 31 ), திலீப் ( 22), கோபிநாத் (20)ஆகிய 3 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதேபோல,திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக ராம்ஜி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்துசப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்த மெய்யப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Comments are closed.