Rock Fort Times
Online News

அண்ணாமலை மீது திருச்சி போலீசில் புகார்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ட்விட்டர் கணக்கில் அவதூறாகவும் , உண்மைக்கு மாறான பொய்யான கற்பனை செய்யப்பட்ட ஒரு படங்களை தமிழ்நாடு பா.ஜ.க  தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளதையும் மேலும் அண்ணாமலை பேசுவது போல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்து வைத்து இருந்ததாகவும் , அதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு வீடியோ   வெளியிடபட்டிருந்தது.    இதனைபார்த்த திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் முரளிதரன் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து உண்மைக்கு மாறாக பொய் செய்தியை பரப்பிய  பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்