Rock Fort Times
Online News

திருச்சி, உறையூர் மார்க்கெட் அருகே 70 போதை மாத்திரைகள் பறிமுதல் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை!

திருச்சி மாநகரில் சமீபகாலமாக போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே பெருகிவரும் போதை கலாச்சாரத்தால் பெருமளவில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுப்பதற்காக மாநகர காவல் துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி, உறையூரில் உள்ள மார்க்கெட் அருகில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மார்க்கெட் பகுதியில் உள்ள டாய்லெட் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.அவரிடம் விசாரித்ததில் போதை மாத்திரை விற்பனை செய்த நபர் திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த அரவிந்த் என்கிற வெள்ளை ராஜா என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த சுமார் 70 போதை மாத்திரைகள் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்