பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடக்கம்… இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தகவல்
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிளஸ்-2 மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று(20-02-2024) வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக “online portal” என்ற வாசகத்தினை click’ செய்து “HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH 2024” என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password- ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.