திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலீ ஊராட்சியில் கவுண்டம்பட்டி கிராமம் கீழுரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இதுசம்பந்தமாக பஞ்சாயத்து நிர்வாகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ஒருசில போ் குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் ஏறி குளிப்பது மற்றும் மது அருந்திவிட்டு பாட்டில்களை குடிநீரில் தொட்டியில் வீசிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்த செயலை கண்டித்தும், குடிநீர் வினியோகம் செய்ய கோரியும் அந்தப் பகுதி பொதுமக்கள் இன்று காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.