திருச்சி தனியார் பள்ளியில் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு..!- போலீசார் விசாரணை!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி ராமநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கே. முருகேசன் (33). இவர் மணப்பாறையில் தனது சகோதரருடன் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில், திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள தனியார் பள்ளியின் 4-ஆவது மாடியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏர்போர்ட் காவல் நிலைய போலீஸார், முருகேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.