பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: திருச்சியில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது…!
பிரதமர் மோடி திருச்சி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் அறிவுறுத்தலின்படி மாவட்ட பொருளாளர் முரளி தலைமையில் இன்று( ஜூலை 27) கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலங்காரம், ஷேக் தாவுத், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், காட்டூர் கோட்டத் தலைவர் ராஜா டேனியல் ராய், மார்க்கெட் கோட்டம் பகதுர்ஷா, மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர், ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஜெயம் கோபி, சுப்பிரமணியபுரம் கோட்ட தலைவர் எட்வின், முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், விவசாய பிரிவு அண்ணாதுரை, இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் விஜய் பட்டேல், மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலா செலஸ், கவிதா நாச்சியார், சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தின், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், இலக்கிய பிரிவு பத்பநாதன், புனித உரிமைத் துறை எஸ்.ஆர் ஆறுமுகம், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அடைக்கன், அன்பு, ஆறுமுகம், பாண்டியன், சுப்புராஜ், மணி, கண்ணன், ஆரிஃப், அப்பு, நிதிஷ், நரேஷ், அஜய், ஆரி, சஞ்சய், நிஷாந்தி, மும்தாஜ், நடராஜன், மோகனாம்பாள், எழில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டு பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
Comments are closed.