Rock Fort Times
Online News

திருச்சியில் “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றி பேரணி- தேசியக்கொடி ஏந்தி கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்பு…!

காஷ்மீர் பஹல்காம் கொடூர தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று சென்னையில் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருச்சியில் இன்று (மே 15) பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இன்று மாலை தேசியக்கொடி ஏந்தி வழிவிடு வேல் முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேஜர் சரவணன் ரவுண்டானாவில் முடிவடைந்தது. இந்தப் பேரணியை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். பேரணியில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில பொருளாளர் சிவசுப்ரமணியன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து,புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்