102-வது பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதி சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் டி.வி.எஸ் டோல்கேட், காட்டூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளான மார்க்கெட் பகுதி வார்டு எண் 17 , பாலக்கரை பகுதி வார்டு எண் 50 , பொன்மலை பகுதி வார்டு 47ஆ , அரியமங்கலம் பகுதி வார்டு எண் 16அ, காட்டூர் பகுதி வார்டு எண் 38 அ, திருவெறும்பூர் பகுதி வார்டு எண் 39 , மலைக்கோட்டை பகுதி வார்டு எண் 12அ ஆகிய பகுதிகளில் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் , பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், நீலமேகம், பாபு, மோகன், மணிவேல், ஏ.எம்.ஜி.விஜயகுமார், ராஜ்முகம்மது, சிவக்குமார், ஒன்றிய செயலாளர் கங்காதரன் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கிருஷ்ணகோபால், ரமேஷ், அருள், சுந்தர்ராஜன், சந்திரமோகன் , பொன் செல்லையா , தனசேகர், தமிழ்ச்செல்வன், மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.