Rock Fort Times
Online News

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்!

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், “டெபுடி சிஎம் – 48” என்கிற தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இருபதாவது நிகழ்ச்சியாக திருச்சி கிழக்கு மாநகரம் மற்றும் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நலிந்த நாடக கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பண உதவி வழங்கும் விழா பொன்மலை பட்டியில் இன்று (டிச.8) நடைபெற்றது. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் எஸ்.வி ராஜ்குமார் மற்றும் மாநகர அமைப்பாளர் மேலகல்கண்டார் கோட்டை செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்வில், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், கவுன்சிலர்கள் இ.எம்.தர்மராஜ், கொட்டப்பட்டு ரமேஷ் மற்றும் பகுதி, வார்டு கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்