முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் கட்சி அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு
கழக அமைப்பு செயலாளர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் ஆர்.ராஜ்குமார் முன்னிலையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி என்.ஜவஹர்லால் நேரு ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.