Rock Fort Times
Online News

செவிலியர் தினம்:- திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்பு…!

உலகம் முழுவதும் வசிக்கும் பொது மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் பங்கு மிக முக்கியமானதாகும்.ஒவ்வொரு ஆண்டும் மே 12-ம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும், செவிலியர்களை கௌரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் “உலக செவிலியர், தினம்” மே 12 ல் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவமனை முதல்வர் குமரவேல் முன்னிலையில், செவிலியர்கள்
கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தாங்கள் ஏற்றுக்கொண்ட அரிய செவிலியர் பணியினை செவ்வனே செய்வோம், பாரபட்சமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் தமிழ்நாடு செவிலியர்கள் சங்க மாநில இணைச்செயலாளர் ஜெயபாரதி, மாவட்ட செயலாளர் சாந்தி, சத்தியகலா, பாக்யராஜ், இருக்கை மருத்துவ அலுவலர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் ஜம்போரி நிகழ்வில் சிறப்பாக செயலாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்