காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிரபல யூடியூபா் டி.டி.எப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனடிப்படையில் தினமும் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் டிடிஎஃப் ஃவாசனின் யூடியூப் சேனலை பார்த்து பல இளைஞர்கள் கெட்டுப் போவதாகவும், அவரது யூடியூப் சேனலை முடக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று டிடிஎஃப் வாசன் யூடியூப் சேனலை முடக்க நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.